பைரவர், சிவனின் அறுபத்து நான்கு ரூபங்களுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இவருக்கு அஷ்டமி திதி உகந்த நாள். அதிலும் குறிப்பாக தேய்பிறை அஷ்டமி அவர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக சொல்லப்படுகிறது. இந்த பைரவரை 108 போற்றி (Bairavar 108 Potri in Tamil) கூறி வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும். பக்தி சிரத்தையுடன் கூறி வழிபட தீவினைகள் நீங்கும். நவகிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
முடிந்தவர்கள் பைரவருக்கு (Bairavar ) சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி இந்த போற்றி துதிகளைக் கூறி வழிபாடு செய்யலாம். இதனால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.
- ஓம் பைரவனே போற்றி
- ஓம் பயநாசகனே போற்றி
- ஓம் அஷ்டரூபனே போற்றி
- ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
- ஓம் அயன்குருவே போற்றி
- ஓம் அறக்காவலனே போற்றி
- ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
- ஓம் அடங்காரின் அழிவே போற்றி
- ஓம் அற்புதனே போற்றி
- ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
- ஓம் ஆனந்த பைரவனே போற்றி
- ஓம் ஆலயக்காவலனே போற்றி
- ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
- ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
- ஓம் உக்ர பைரவனே போற்றி
- ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
- ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
- ஓம் உன்மத்த பைரவனே போற்றி
- ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
- ஓம் எல்லை தேவனே போற்றி
- ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
- ஓம் கபாலதாரியே போற்றி
- ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
- ஓம் கர்வ பங்கனே போற்றி
- ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
- ஓம் கதாயுதனே போற்றி
- ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
- ஓம் கருமேக நிறனே போற்றி
- ஓம் கட்வாங்க தாரியே போற்றி
- ஓம் களவைக் குலைப்போனே போற்றி
- ஓம் கருணாமூர்த்தியே போற்றி
- ஓம் கால பைரவனே போற்றி
- ஓம் காபாலிகர் தேவனே போற்றி
- ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
- ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
- ஓம் காசிநாதனே போற்றி
- ஓம் காவல்தெய்வமே போற்றி
- ஓம் கிரோத பைரவனே போற்றி
- ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
- ஓம் சண்ட பைரவனே போற்றி
- ஓம் சட்டை நாதனே போற்றி
- ஓம் சம்ஹார பைரவனே போற்றி
- ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் சிவத்தோன்றலே போற்றி
- ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
- ஓம் சிக்ஷகனே போற்றி
- ஓம் சீர்காழித்தேவனே போற்றி
- ஓம் சுடர்ச்சடையனே போற்றி
- ஓம் சுதந்திர பைரவனே போற்றி
- ஓம் சிவ அம்சனே போற்றி
- ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
- ஓம் சூலதாரியே போற்றி
- ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
- ஓம் செம்மேனியனே போற்றி
- ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
- ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
- ஓம் தலங்களின் காவலனே போற்றி
- ஓம் தீது அழிப்பவனே போற்றி
- ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
- ஓம் தெற்கு நோக்கனே போற்றி
- ஓம் தைரியமளிப்பவனே போற்றி
- ஓம் நவரச ரூபனே போற்றி
- ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
- ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
- ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
- ஓம் நாய் வாகனனே போற்றி
- ஓம் நாடியருள்வோனே போற்றி
- ஓம் நிமலனே போற்றி
- ஓம் நிர்வாணனே போற்றி
- ஓம் நிறைவளிப்பவனே போற்றி
- ஓம் நின்றருள்வோனே போற்றி
- ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
- ஓம் பகையளிப்பவனே போற்றி
- ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
- ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
- ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் பால பைரவனே போற்றி
- ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
- ஓம் பிரளயகாலனே போற்றி
- ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
- ஓம் பூஷண பைரவனே போற்றி
- ஓம் பூதங்களின் நாதனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பைராகியர் நாதனே போற்றி
- ஓம் மல நாசகனே போற்றி
- ஓம் மகோதரனே போற்றி
- ஓம் மகா பைரவனே போற்றி
- ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
- ஓம் மகா குண்டலனே போற்றி
- ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் முக்தியருள்வோனே போற்றி
- ஓம் முனீஸ்வரனே போற்றி
- ஓம் மூலமூர்த்தியே போற்றி
- ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
- ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
- ஓம் ருத்ரனே போற்றி
- ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
- ஓம் வடுக பைரவனே போற்றி
- ஓம் வடுகூர் நாதனே போற்றி
- ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
- ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
- ஓம் வாரணாசி வேந்தே போற்றி
- ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
- ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
- ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி